வாற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி பொங்கல்: பக்தர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை.

Sri Lankan Tamils Mullaitivu Northern Province of Sri Lanka
By Uky(ஊகி) May 20, 2024 04:35 AM GMT
Uky(ஊகி)

Uky(ஊகி)

in சமூகம்
Report
Courtesy: uky(ஊகி)

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இன்று (20.05.2024) நடைபெறவுள்ள வைகாசி விசாகப் பொங்கலுக்கு ஆலயம் வரும் பக்தர்களிடமும் வியாபாரிகளிடமும் கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர்கள் பலரும் இது தொடர்பில் தங்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளமை நோக்கத்தக்கது.

கடந்த 2023 ஆம் வருட வைகாசிப் பொங்கல் நிகழ்வுக்கு வந்திருந்த மக்களின் சிந்திக்க மறந்த செயற்பாடுகள் மூலம் ஆலயச் சூழலில் தேங்கியிருந்த கழிவுகளின் காட்சிகளை அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் சுட்டிக்காட்டியிருந்தனர்.அந்த புகைப்படங்களே இந்தச் செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளன.

ஆலயச் சூழலில் வீசப்படும் குப்பைகளை அகற்றுவதற்காக அடுத்த நாளில் பலர் பங்கெடுத்து சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றி ஆலயச் சூழலை சுத்தமாக்கிக் கொள்ள வேண்டியிருந்தது எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

வீசப்படுதலைத் தவிர்க்கலாம் 

ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கும் வியாபார நிலையங்களுக்கும் குப்பைகளை எப்படி பேண வேண்டும் என்ற தெளிவூட்டல்கள் அவசியமாகும்.

உற்சவ கால ஏற்பாடுகளில் போது அதனை பிரதேச சபையும் ஆலய நிர்வாகமும் கவனத்தில் எடுத்திருக்கும் என்பதும் இங்கே நோக்கத்தக்கது.

வாற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி பொங்கல்: பக்தர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை. | Vaatappalai Kannagi Amman Temple Vaikasi Pongal

எனினும் குப்பைகளை வீசும் நிலையில் இருப்பவர்கள் அதனை உரிய குப்பைக் கூடைகளில் போட்டு விடலாம். அல்லது அவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு பையில் போட்டு கட்டி அவரவர் இருக்கும் இடங்களுக்கு அருகில் வைத்துவிட்டால் அவற்றை அடுத்த நாளில் எடுத்தகற்றுவது இலகுவானதாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

காற்றில் பரவிச் செல்லும் குப்பைகள் தொடர்பில் அதிக கவனமெடுத்து ஒவ்வொருவரும் வீச முற்படும் கழிவுகளை மீளவும் பெற்றுக்கொள்ளும் வகையில் பையிலிட்டுக் கட்டி வைப்பதே மேலானதாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நந்திக் கடலில் கலக்கிறது 

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் ஒரு பகுதியாக நந்திக்கடல் இருக்கிறது.

வைகாசிப் பொங்கலின் போது எழுந்தமானமாக வீசப்படும் பொலித்தீன் உள்ளிட்ட குப்பைகள் காற்றோடு எடுத்துச் சென்று நந்திக்கடலில் கலந்து விட்டால் நந்திக்கடல் பொலித்தீன் போன்ற இலகுவில் உக்கலடையாத பொருட்களால் மாசடைந்து கொண்டு செல்லும்.இது ஆரோக்கியமான செயற்பாடாக இருக்காது என்பதும் நோக்கத்தக்கது.

வாற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி பொங்கல்: பக்தர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை. | Vaatappalai Kannagi Amman Temple Vaikasi Pongal

நந்திக் கடலின் மீன்வளம் இதனால் பாதிப்படைவதோடு நந்திக்கடலில் உள்ள பரந்த உயிர்ப்பல்வகைமையும் அழிவை நோக்கி விரைவாக கொண்டு செல்லப்பட்டு விடும்.

ஒரு நாளில் நடந்தேறும் வைகாசிப் பொங்கல் நிகழ்வில் நாம் ஒவ்வொருவரும் நடந்து கொள்ளும் சிந்தனையற்ற முறையிலான செயற்பாடுகளுக் கூடாக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் மற்றும் நந்திக்கடல் சூழலை மாசாக்கிச் செல்வது நல்லதல்லவே!

மனதில் மாற்றம் வேண்டும் 

ஆலய எல்லைக்குள் நுழையும் ஒவ்வொருவரும் மனதளவில் ஆலயச் சூழலை சுத்தமாக பேணுவதில் என்னாலான எல்லாவற்றையும் இயன்றளவில் செய்து கொள்வேன் என்று எண்ணிக் கொள்ள வேண்டும்.

வாற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி பொங்கல்: பக்தர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை. | Vaatappalai Kannagi Amman Temple Vaikasi Pongal

அப்போதே நாம் நம்மைத் தயார் செய்து கொண்டு விடுவோம்.நாம் வாங்கிக் கொள்ளும் ஒவ்வொரு பொருட்களில் இருந்தும் அகற்றி வீசப்படும் பொருட்களை அருகில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளினுள் போட்டுச் செல்ல முற்பட முனைந்துவிடுவோம்.

ஒருங்கிணைந்த முறையில் செயற்பட முடிந்தால் ஆலயச் சூழலில் சேரும் குப்பைகள் சிதறிச் செல்வதை தடுப்பதோடு அவற்றை அகற்றுவோருக்கு இலகுவானதாகவும் ஆக்கிப் போகலாம் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

யாழ். நண்பர்களின் பத்தாவது வருட நிறைவு நிகழ்வு

யாழ். நண்பர்களின் பத்தாவது வருட நிறைவு நிகழ்வு

முல்லைத்தீவில் சூட்சுமமான முறையில் மரகடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது

முல்லைத்தீவில் சூட்சுமமான முறையில் மரகடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGallery
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US