இரத்தம் சிந்தாத இனவழிப்பினை மேற்கொள்கின்றதா அநுர அரசாங்கம்..! வே.கரிகாலன் கேள்வி
இலங்கையில் அன்றைய ஜனாதிபதியாக இருக்கட்டும் இன்றைய ஜனாதிபதியாக இருக்கட்டும் தமிழ் மக்களை பல்வேறு வகையில் குறிவைத்து? இரத்தம் சிந்தாத இனவழிப்பினை அரசாங்கம் தமிழர் பகுதிகளில் அரங்கேற்றி வருகின்றது என புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே.கரிகாலன் தெரிவித்துள்ளார்.
நேற்று(10.06.2026) புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் இலங்கை படையினரால் படுகொலைசெய்யப்பட்ட மக்களின் 28ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அநுர ஆட்சியிலும் தொடரும் அடக்குமுறை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழர்களின் மண்ணில் பல்வேறுபட்ட வடிவங்களில் படுகொலைகளை இலங்கையில் ஆட்சிபீடம் ஏறுகின்ற ஜனாதிபதிகள் செய்கின்றமை வழமை. அதேபோன்று 1998 ஆம் ஆண்டு சுதந்திரபுரத்தில் எங்கள் உறவுகளை வான்படை, எறிகணைகளால் கொன்றொழித்தார்கள்.

தமிழர்களின் ஜனநாயத்தினை வென்றெடுக்க பல்வேறு பட்ட முனைப்புக்களை தமிழ்மக்கள் முனைந்தாலும் எந்த அரசாங்கமும் எந்த சமிக்ஞைகளை செய்ததாக இல்லை.
தொடர்ச்சியாக எங்கள் மண்ணில் இரத்தம் சிந்தாத இனவழிப்பு திட்டமிட்டவகையில் இடம்பெறுகின்றது அண்மையில் ஒரு பாடலை பாடிய குற்றச்சாட்டில் இந்த இளைஞனை பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்தார்கள்.

தற்போது இருக்கின்ற ஜே.வி.பி எனப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறும்போது எவ்வாறு எங்கள் தமிழ்மக்கள் பிரதேசங்களில் தாங்கள் அரசியலுக்காக வருவதற்கு கருத்துக்களை விதைத்தார்கள்.
அந்த கருத்திற்கு முரணாக முன்னைய அரசாங்கம் எங்கள் மக்களை பல்வேறு வகையில் அடக்குமுறையினை கையாண்டதோ அவ்வாறும் இந்த அரசாங்கம் இந்த மண்ணில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினை காட்டிக்கொண்டிருக்கின்றது. எங்கள் மக்கள் இன்று ஜ.நா வரைக்கும் குரல்கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றார்.