அடுத்த சில மணிநேரங்களில் ஈரானுடன் அமெரிக்கா ஒப்பந்தம்! வெளியான ஒப்பந்தம்
ஈரானுடனான ஒப்பந்தம் அடுத்த இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்களுக்குள் கையெழுத்திடப்படும் என தாம் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு ட்ரம்ப் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இன்று பெய்ரூட் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தான் தொலைபேசியில் பேசியதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
மேலதிக தாக்குதல்
இதன்போது தமது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் முன்னோக்கி நகர்வதைப் பாதிக்காத வகையில், ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மேலதிக தாக்குதல்களை நடத்த வேண்டாம் என்று அவர் இஸ்ரேல் பிரதமரிடம் கூறியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
கர்ப்பமாக இருக்கும் தங்கமயில் மீது கல்லை தூக்கி போட போன சரவணன்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
கடலுக்குள் கட்டப்படும் மிகப்பெரிய சுரங்கப்பாதை., ஜேர்மனி டு டென்மார்க் 7 நிமிடத்தில் பயணம் News Lankasri