இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க கடும் கண்டனம்
பாலஸ்தீன மக்களுக்கான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்காமல் அவர்களை மரணிக்க செய்யும் இஸ்ரேலின் முயற்சிகளுக்கு அமெரிக்க கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், காசா பகுதியில் உள்ள பேரழிவு மற்றும் மனிதாபிமான நெருக்கடிக்கு இஸ்ரேல் தீர்வு காண வேண்டும் என்று ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர்லிண்டா தோமஸ்-கிரீன்ஃபீல்ட்(Linda Thomas-Greenfield) வலியுறுத்தியுள்ளார்.
மத்திய கிழக்கு தொடர்பான பாதுகாப்பு அமர்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இஸ்ரேலிய முயற்சி
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், பாலஸ்தீனியர்களை பட்டினி கிடக்க வைக்கும் இஸ்ரேலிய முயற்சிகளை அமெரிக்கா நிராகரிக்கிறது.
மேலும், இஸ்ரேல் உணவு, மருந்து மற்றும் பிற பொருட்களை காசா முழுவதிலும், குறிப்பாக வடக்கு பகுதிக்குள் அனுமதிக்க வேண்டும்.
அத்தோடு உதவிகளை விநியோகிக்கும் ஐ.நா ஊழியர்களைப் பாதுகாக்க வேண்டும்.
மேலும் பாலஸ்தீனியர்களுக்கான மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 16 மணி நேரம் முன்

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
