ஈரானை தாக்கிவிட்டு சரணடையும்படி மிரட்டிய அமெரிக்கா..
உலக நாடுகளின் அத்தனை எச்சரிக்கைகளையும் கடந்து ஈரான் மீது அமெரிக்கா நேரடித் தாக்குதலை நடத்தியுள்ளது.
மூன்றாம் உலக யுத்தம் ஏற்படும் என்ற ரஷ்ய ஜனாதிபதி புடினின் எச்சரிக்கையும் மீறி ஈரானின் மூன்று நிலக்கீழ் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதலை நடாத்தி அவற்றினை முற்றாக அமெரிக்கா அழித்துள்ளது.
அமெரிக்காவின்(USA) தாக்குதலைத் தொடர்ந்து ஈரானை நிபந்தனை எதுவுமில்லாமல் சரணடையும் படியாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
கண்டிப்பாக ஈரான் ஒரு சமாதானத்துக்கு வந்தேயாக வேண்டும் என்றும் ஈரானை(Iran) எச்சரித்திருத்தார்.
அமெரிக்காவின் பரிபாசையில் ஒரு நாட்டைக் குறிவைத்து அமெரிக்கா வெளியிடுகின்ற ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கின்றது.
ஈரானைப் பொறுத்தவரையில் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ள சமாதானம் என்ற சொல்லுக்கு ‘சரணடைதல்’ என்று அர்த்தம்.
ஈரான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ட்ரம்ப் பேசிய விடயங்களை ‘Decode’செய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி...

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri
