இலங்கையில் நல்லாட்சியின் வெளிப்படைத்தன்மையை மீண்டும் வலியுறுத்திய அமெரிக்கா
இலங்கையில் (Sri Lanka) நல்லாட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையின் அவசியத்தை அமெரிக்கா (United States of America) மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie J. Chung) மத்திய வங்கி ஆளுநருடன் இந்த வாரம் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்
அமெரிக்க தூதரக வளாகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடன் இருதரப்பு நிதி உறவுகள், கடன் மறுசீரமைப்பு மற்றும் தற்போதைய சீர்திருத்தங்கள் பற்றி தாம் விவாதித்ததாக தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பொருளாதார வளர்ச்சி
அத்துடன், இதன்போது வலுவான மற்றும் ஆற்றல்மிக்க இலங்கைப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளித்து வருவதால், நல்லாட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையின் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
