சலேவின் கடவுச்சொற்களுக்கு பின்னால் என்ன ரகசியம்..! சலே விவகாரத்தில் கம்மன்பிலவின் சட்டப் போராட்டம்
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் துவான் சுரேஷ் சலே தொடர்பான வழக்கு விசாரணையில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் உதய கம்மன்பில பல கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
சுரேஷ் சலே தனது மடிக்கணணி மற்றும் கைபேசியின் கடவுச்சொற்களை (Password) விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். சிஐடி (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகரவை இந்த விசாரணையில் இருந்து நீக்க முடியாது.
சுரேஷ் சலே தரப்பில் கோரப்பட்ட புத்தகம் மற்றும் எழுதும் உபகரணங்களுக்கான அனுமதி, பாதுகாப்பு காரணங்களால் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
உதய கம்மன்பில, சுரேஷ் சலே கடவுச்சொற்களை வழங்கக்கூடாது என நான்கு முக்கிய காரணங்களை ஊடக சந்திப்பில் முன்வைத்துள்ளார்.
ஒரு சந்தேக நபர் தனது மீதான விசாரணைக்கு ஒத்துழைக்கவோ அல்லது வாக்குமூலம் அளிக்கவோ கட்டாயப்படுத்தப்படக்கூடாது என்பது அடிப்படை சட்டம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் சட்ட விரோதமான அழுத்தங்களைக் கொடுப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். கணினியில் அதிமுக்கியமான உளவுத்துறை தகவல்கள் மற்றும் தகவல் வழங்குநர்களின் விவரங்கள் இருப்பதால், அவை கசிவது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும்.
2002-ஆம் ஆண்டு நடைபெற்ற 'மிலேனியம் சிட்டி' (Millennium City) சம்பவத்தைப் போல, உளவுத்துறை ரகசியங்கள் வெளியே கசிந்து அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அச்சத்தை அவர் முன்வைத்துள்ளார்.
இறுதியாக, நீதிமன்ற உத்தரவை மதிப்பதாகக் கூறும் கம்மன்பில, சட்டரீதியான குறைபாடுகள் இருப்பதாகக் கருதி, சுரேஷ் சலேவின் சட்டத்தரணிகள் மேன்முறையீடு செய்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது Newsinsight தமிழ் நிகழ்ச்சிகள்..
[
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri