அமெரிக்கா - பிரித்தானியா மருந்து வர்த்தக ஒப்பந்தம்! வெளியான அதிர்ச்சியூட்டும் எச்சரிக்கை
அமெரிக்கா மற்றும் பிரித்தானிய நாடுகளுக்கு இடையே கையெழுத்தாகியுள்ள புதிய மருந்து வர்த்தக ஒப்பந்தம் காரணமாக, பிரித்தானியாவில் சுமார் 2 இலட்சத்து 29 ஆயிரத்திற்கும் கூடுதலான மரணங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக பிரித்தானிய மருத்துவ இதழில் (BMJ) வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வு ஒன்று அதிர்ச்சியூட்டும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அன்றைய பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் ஆகியோருக்கு இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
சீனாவின் புதிய 'இன ஒற்றுமைச் சட்டம்: வெளிநாட்டவர்களையும் தண்டிக்கும் பிரிவால் சர்வதேச அளவில் எதிர்ப்பு
மருத்துவத் தொழில்நுட்ப ஏற்றுமதி
இதன்படி, பிரித்தானியாவின் மருத்துவத் தொழில்நுட்ப ஏற்றுமதிக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அமெரிக்கா வரி விதிக்காது.
அதற்குப் பதிலாக, அமெரிக்காவின் புதிய காப்புரிமை பெற்ற மருந்துகளை வாங்குவதற்காக, பிரித்தானியா தனது தேசிய சுகாதார சேவை (NHS) பட்ஜெட்டை 10 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்த ஒப்புக்கொண்டுள்ளது.

அதாவது, 2036-ஆம் ஆண்டிற்குள் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 0.6 சதவீத தொகையை அமெரிக்க மருந்துகளுக்காக பிரித்தானியா செலவிட வேண்டும்.
பிரித்தானிய அரசின் இந்த முடிவு அந்த நாட்டின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பிற்குப் பெரும் முட்டுக்கட்டையாக மாறும் என மருத்துவ வல்லுநர்கள் சாடியுள்ளனர்.
பிரித்தானியாவின் சுகாதாரத் துறைக்குக் கூடுதல் நிதி ஒதுக்காமல், இருக்கும் நிதியிலேயே அமெரிக்க நிறுவனங்களிடம் அதிக விலை கொடுத்து மருந்துகளை வாங்க முற்படுவதால், மருத்துவமனைப் பராமரிப்பு, மருத்துவர்களைப் பணியமர்த்துதல் மற்றும் அவசரச் சிகிச்சைகளுக்கான நிதி பெருமளவில் பற்றாக்குறையாகும்.
சமூகப் பராமரிப்புத் துறை
இந்த நிதி திசைதிருப்பல் காரணமாக இதய நோய், சுவாசப் பிரச்சினைகள், புற்றுநோய் மற்றும் குடல் நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் முறையான சிகிச்சையின்றி உயிரிழக்கும் அபாயம் ஏற்படும் என இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
2036-ஆம் ஆண்டிற்குள் நேரடியாக 2,29,000 மரணங்கள் நிகழக்கூடும் என்றும், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூகப் பராமரிப்புத் துறையின் பாதிப்புகளையும் கணக்கில் கொண்டால் இந்த இறப்பு எண்ணிக்கை 2,91,000 ஆக உயரக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இது கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் பிரித்தானியாவில் ஏற்பட்ட மரணங்களை விடவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மருந்து நிறுவனங்களின் இலாபத்திற்காக பிரித்தானியா மக்களின் வரிப்பணமும், உயிரும் நசுக்கப்படுவதாக 'குளோபல் ஜஸ்டிஸ் நவ்' போன்ற மக்கள் நல அமைப்புகள் இந்த ஒப்பந்தத்தைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
சலேவின் கைப்பேசி மற்றும் கணினியில் சில மர்ம நபர்கள் தொடர்பான அதிமுக்கிய தகவல்கள்! வெளிப்படுத்தும் கம்மன்பில
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri