அமெரிக்க-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை: நெதன்யாகு விடுத்துள்ள முக்கிய சவால்
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தம் வெற்றிகரமாகச் செயல்பட வேண்டுமானால், வொஷிங்டன் நிர்வாகம் முதலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று இத்தாலியின் துரின் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் லோரென்சோ காமல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் அதிகாரிகளுக்கு இடையே ஏற்படும் எந்தவொரு உடன்பாட்டையும் பலவீனப்படுத்தும் நோக்கில், இஸ்ரேலிய அதிகாரிகள் லெபனானில் மோதலை தீவிரப்படுத்த முயன்று வரும் வேளையில், இந்த ஒட்டுமொத்த விவகாரத்திலும் நெதன்யாகுவே மிக முக்கியமான மறைமுக காரணியாக விளங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலில் அடுத்த தேர்தல் நடக்கும் வரை, தான் ஒரு தவிர்க்க முடியாத போர் காலத் தலைவர் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் நெதன்யாகு உள்ளார்.
போர் நிறுத்தம்
இந்தத் தொடர் பதற்ற நிலை இல்லாவிட்டால் அவரது அரசியல் நிலை பலவீனமடையும் என்பதும், இஸ்ரேலுக்குள் இருக்கும் எதிர்க்கட்சிகள் அவரை அதிகாரத்தில் இருந்து அகற்றிவிடும் என்பதும் அவருக்கு நன்றாகவே தெரியும் என்று பேராசிரியர் காமல் விளக்கியுள்ளார்.

அமெரிக்கா தொடர்ந்து இஸ்ரேலை எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றிச் செயல்பட அனுமதித்து வருவதாகவும், லெபனானில் முழுமையான போர்நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு ட்ரம்ப் நேரடியாக நெதன்யாகுவிற்கு உத்தரவிடும் வரை, ஈரான்-அமெரிக்க அமைதி ஒப்பந்தம் என்பது "மிகவும் பலவீனமானதாகவே" இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 7 மணி நேரம் முன்
அந்த கதாபாத்திரத்தில் நடித்ததால் மரணமடைந்த கவுண்டமணி, செந்தில் பட நடிகர்.. அதிர்ச்சி தகவல் Cineulagam