லண்டனில் தமிழருக்கு சொந்தமான கடையில் நடந்த விசா மோசடி அம்பலம்
பிரித்தானியாவில் தமிழருக்கு சொந்தமான கடையொன்றில் விசா இன்றி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பெருந்தொகை பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் செயற்படும் தமிழ் கடையொன்றில் விசா இல்லாத இளைஞன் பணியாற்றிய நிலையில், மிகவும் குறைந்த அளவிலான சம்பவம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2025 நவம்பர் 29 அன்று ஈலிங் கவுன்சில் அதிகாரிகள் மற்றும் குடிவரவு அதிகாரிகள் கடைக்குள் புகுந்து அதிரடி சோதனை ஒன்றை நடத்தியிருந்தனர்.
சட்டபூர்வ விசா
இதன்போது பிரித்தானியாவில் தங்குவதற்கோ அல்லது வேலை செய்வதற்கோ சட்டபூர்வ விசா இல்லாத நபர் அங்கு பணிபுரிந்தமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் மணித்தியாலத்திற்கு 6.50 பவுண்டுகள் மட்டுமே கைக்காசாக கடையின் உரிமையாளரினால் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் குறித்த கடையின் உரிமையாளருக்கு 28,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 8 மணி நேரம் முன்
ஒரே ட்யூனில் உருவான 2 பாடல்கள்.. இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட்! மேஜிக் செய்த இசையமைப்பாளர் இளையராஜா.. Cineulagam