மூன்று ஈரானிய கப்பல்களை சிறைப்பிடித்த அமெரிக்கா! ஆசியக் கடற்பரப்பில் பதற்றம்
அமெரிக்க இராணுவம் ஆசிய கடல் பகுதிகளில் குறைந்தது மூன்று ஈரான் கொடியுடன் இருந்த எண்ணெய் டேங்கர்களை தடுத்து நிறுத்தி, அவற்றை இந்தியா, மலேசியா மற்றும் இலங்கை அருகிலுள்ள நிலைகளில் இருந்து மாற்றி செலுத்தியுள்ளதாக கப்பல் மற்றும் பாதுகாப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான், ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களை தடுக்க தாக்குதல்கள் நடத்தி வருவதுடன், அமெரிக்கா ஈரானின் கடல் வர்த்தகத்திற்கு தடுப்பு (blockade) விதித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக நடத்திய தாக்குதலுக்குப் பிறகு சுமார் இரண்டு மாதங்கள் கடந்தும், போர் நிறுத்தம் நிலைத்திராத நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்கலில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு பாதிக்கப்பட்டு, உலகளாவிய எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சமீப நாட்களில் அமெரிக்க படைகள் ஒரு ஈரான் சரக்கு கப்பலையும் ஒரு எண்ணெய் டேங்கரையும் கைப்பற்றியுள்ளன.

இதேவேளை, ஈரான் புதன்கிழமை மூன்று கப்பல்களை தாக்கி பிடித்ததாகவும், இது போருக்குப் பிறகு நடந்த முதல் கடல் கைப்பற்றல்கள் எனவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராணுவம் சமீப நாட்களில் குறைந்தது மூன்று ஈரான் எண்ணெய் டேங்கர்களை திசைதிருப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
29 கப்பல்கள்
அவற்றில் ஒன்று “Deep Sea” என்ற சூப்பர் டேங்கர் ஆகும். இது மலேசியா அருகே கடைசியாக காணப்பட்டதாக கூறப்படுகிறது. “Sevin” என்ற மற்றொரு கப்பல், 10 லட்சம் பேரல் எண்ணெய் கொள்ளளவு கொண்டதாகவும், மலேசியா அருகே ஒரு மாதத்திற்கு முன்பு காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
“Dorena” என்ற சூப்பர் டேங்கர் முழுமையாக 20 லட்சம் பேரல் எண்ணெய் கொண்டு இந்தியா தெற்குக் கடற்கரை அருகே மூன்று நாட்களுக்கு முன்பு காணப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM), இந்த Dorena கப்பல் அமெரிக்க கடற்படை டெஸ்ட்ராயர் கப்பலின் பாதுகாப்பில் இந்திய பெருங்கடலில் கண்காணிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
மொத்தமாக, அமெரிக்க படைகள் ஈரான் துறைமுகங்களில் இருந்து வெளியேறும் அல்லது உள்ளே செல்லும் 29 கப்பல்களை திருப்பி அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இராணுவம், ஹோர்முஸ் நீரிணை பகுதியை தவிர்த்து திறந்த கடல் பகுதிகளில் ஈரான் கப்பல்களை இலக்காகக் கொள்வதாகவும் பாதுகாப்பு காரணங்களுக்காக இது மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இலங்கை கடலில் அமெரிக்காவால் தாக்கப்பட்ட ஐரிஸ் தேனா கப்பல் ! விஜித ஹேரத் -அப்பாஸ் அராக்சி தொலைபேசி உரையாடல்