உயிர்த்த ஞாயிறு வழக்கில் அதிரடி திருப்பம்! சுரேஷ் சலே முன்வைத்த முக்கிய வாதங்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற காலத்தில் சுரேஷ் சலே இந்தியாவில் இருந்ததாகவும் அதனால் அவர் தாக்குதலை திட்டமிட்டு நடாத்தினார் என்பது சாத்தியமற்ற விடயமாகும் என சட்டத்தரணிகள் வாதித்துள்ளனர்.
அத்தோடு, பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கைகளை முன்வைத்ததன் பின்னர் அரசியல் தலையீட்டின் காரணமாக சுரேஷ் சலே தனது பதவியிலிருந்து மாற்றப்பட்டு மலேசியாவுக்கு அனுப்பப்பட்டதாக சட்டத்தரணிகள் வாதங்களில் தெரிவிக்கின்றனர்.
மேலும் தீவிரவாதத்தை எதிர்கொள்ள இராணுவம் மற்றும் பொலிஸார் மற்றும் பிற அமைப்புக்களை இணைக்கும் திட்டம் ஒன்றை சுரேஷ் சலே முன்வைத்ததாகவும் ஆனால் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.
பிரான்ஸில் அசாத் மௌலானாவிடம் வாக்குமூலம் பெறச் சென்ற சிஐடி அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்து சுரேஷ் சலே தரப்பு கேள்வி எழுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.
ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri