சீன ஆராய்ச்சிக் கப்பலின் பயணம் குறித்து அமெரிக்கா கவலை
சீன ஆராய்ச்சிக் கப்பலின் பயணம் குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்தபோது, கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இலங்கை ஒரு நடுநிலை நாடு என்ற வகையில், தமது பிராந்தியத்தில் வெளிநாட்டு கப்பல்கள் மற்றும் விமானங்கள் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்வதற்கு பின்பற்ற வேண்டிய நிலையான நடைமுறையை தாம் வகுத்துள்ளதாக அமைச்சர் அலி சப்ரி இதன்போது விளக்கமளித்துள்ளார்.
இந்த அணுகுமுறையை அனைத்து நாடுகளுக்கும் சமமாகவே இலங்கை நடத்துகின்றது என்றும் அந்த செயன்முறையில் சீனாவை மட்டும் விலக்க முடியாது என்றும் அமைச்சர் அலி சப்ரி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீரியல் வள ஆராய்ச்சி
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்த அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட்டை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்படி சீன ஆராய்ச்சிக் கப்பல் அக்டோபர் மாதம் இலங்கையில் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ள நிலையில் இந்தியாவும் கடுமையான ஆட்சேபனையை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan
