மேல் மாகாண வாகன சாரதிகளுக்கு முக்கிய தகவல்!
மேல் மாகாணத்தில் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் வழங்கும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
கணனி முறைமையின் புதுப்பித்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதால் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கே.சி.என்.பெரேரா தெரிவித்துள்ளார்.
வாகன வருமான உத்தரவுப் பத்திரம் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.
வாகன வருமான பத்திரம்
இந்தக் காலப்பகுதியில் காலாவதியாகும் வாகன வருமான உத்தரவுப் பத்திரங்களை அபராதம் செலுத்தாமல் புதுப்பிக்கலாம்.
இணையம் மூலம் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் பெறுவது, இன்று முதல் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri
