Super Race மனித இனத்தை உருவாக்க திட்டம்.. எப்ஸ்டீனின் மிரள வைக்கும் செயல்
அமெரிக்க பாலியல் குற்றவாளியான மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீன், தன்னுடைய விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்டு இருந்த பின்னணி தெரியவந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் 2018 ஆண்டு பகுதியில் கண்டறியப்பட்டு ஒரு குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது அமெரிக்க நீதித்துறையினால், எப்ஸ்டீன் தொடர்பான இலட்சக்கணக்கான கோப்புக்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இவ்விடயத்தின் பின்னணியும் வெளிப்பட்டுள்ளது.
தனது விந்தணுக்கள்..
அதன்படி, உயிரிழந்த ஜெப்ரி எப்ஸ்டீன் தன்னுடைய விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட தகவலில், ஜெப்ரி எப்ஸ்டீனுக்கு சொந்தமான 10,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட நியூ மொக்சிகோவின் ஜோரோ ராஞ்ச் எஸ்டேட்டில் 20 பெண்களை திட்டமிட்டு தேர்ந்தெடுத்து Super Race மனித இனத்தை உருவாக்குவது தொடர்பான திட்டத்தை செயல்படுத்த எப்ஸ்டீன் திட்டமிட்டுள்ளார்.
இந்த பெண்களை கருத்தரிக்க வைத்து மரபணு தொழில்நுட்பம் மூலமாக அவர்களின் கர்ப்ப காலத்திலேயே குழந்தைகளுக்கு அசாதாரண ஆற்றலையும், அறிவையும் வழங்கி Super Race மனித இனத்தை உருவாக்க ஜெப்ரி எப்ஸ்டீன் விரும்பியுள்ளார்.
பகீர் திட்டம்
ஜெப்ரி எப்ஸ்டீன் தன்னுடைய திட்டத்திற்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முன்னணி அறிவியல் விஞ்ஞானிகளுக்கு தன்னுடைய தனித்தீவில் விருந்தளித்துள்ளார்.

மேலும் ஹார்வர்டு பல்கலைக்கழகம் உட்பட பல முன்னணி பல்கலைக்கழகங்களுக்கு ஜெப்ரி எப்ஸ்டீன் நிதியுதவி வழங்கியுள்ளார்.
அத்துடன் தன்னுடைய தலை மற்றும் பிறப்புறுப்பை உறை நிலையில் சேமித்து வைத்து எதிர்கால தொழில்நுட்பம் மூலமாக தன்னை மீண்டும் உயிர்ப்பிக்க எப்ஸ்டீன் விரும்பியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
கோபத்தில் சேரனை திட்டிய நிலா.. ராகவை அடித்த சோழன்.. அய்யனார் துணை சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
பாகிஸ்தான் T20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ICC உயர் அதிகாரி: சர்ச்சை கிளப்பிய நிகழ்வு News Lankasri