சபாநாயகர் மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட பிரதிச் செயலாளர் நாயகம் மீதான விசாரணைகள் ஆரம்பம்
இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன ஆகிய இருவருக்கும் எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யப்படவுள்ளன.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய பமுறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு, இது தொடர்பான தீர்மானித்தை எடுத்துள்ளது.
விசாரணைகள் ஆரம்பம்
சமிந்த குலரத்னவினால் முன்வைக்கப்பட்ட 8 பிரதான குற்றச்சாட்டுகள் குறித்து சபாநாயகர் விசாரணைக்கு உள்ளாகிறார்:
முறையற்ற வகையில் இரண்டு எரிபொருள் கொடுப்பனவுகளைப் பெறுதல்அதிகாரப்பூர்வ வாகனங்கள் மற்றும் நாடாளுமன்ற ஊடக உபகரணங்களை தவறாகப் பயன்படுத்துதல்.

நாடாளுமன்றத்தில் பணம் செலுத்தாமல் உணவு பெறுதல்.நாடாளுமன்ற நிதியில் விசாரணை அதிகாரி ஒருவரை சட்டவிரோதமாக நியமித்தல்.இரண்டு அதிகாரப்பூர்வ இல்லங்களை முறையற்ற வகையில் பயன்படுத்துதல்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் தகவல்களை வழங்கத் தடுத்தல் உட்பட்ட குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
வாக்குமூலங்கள் பதிவு
ஆர். கண்ணன் என்பவர் வழங்கிய முறைபாட்டின் அடிப்படையில், சமிந்த குலரத்னவின் நியமனம் சட்டவிரோதமானது என்ற குற்றச்சாட்டு விசாரணை செய்யப்படவுள்ளது.

அவர் தகுதியான நடைமுறைகளைப் பின்பற்றாமல் பிரதிச் செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், முதற்கட்டமாக இது தொடர்பான ஆவணங்களை நாடாளுமன்றத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள லஞ்ச ஊழல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர், சபாநாயகர் மற்றும் சமிந்த குலரத்ன ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் என்று தெரியவருகிறது.