அமெரிக்காவின் தொடர் தாக்குதலுக்கு இலக்காகும் யேமன்
யேமனின் (Yemen) ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டதாக ஹவுத்திகளுடன் தொடர்புடைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கப் படைகள் நாட்டின் மீது நடத்திய மிகக் கொடூரமான தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும் என குறி்பிடப்பட்டுள்ளது.
ஏவுகணைத் தாக்குதல்கள் பைடன் நிர்வாகத்தால்
2023 நவம்பர் முதல் தொடர்ந்து குண்டுவீச்சுக்கு உள்ளாகி வரும் செங்கடல் கப்பல் பாதைகளை ஹவுத்திகள் குறிவைப்பதை நிறுத்தாவிட்டால் தாக்குதல்கள் நிறுத்தப்படாது என்று அமெரிக்கா கூறியுள்ளது.
#BREAKING: U.S. military destroys Yemen’s Ras Isa fuel port, targeting Iran-backed Houthis’ economic lifeline. CENTCOM says strike aims to curb terrorism funding pic.twitter.com/sDp28uOZ4O
— Breaking News (@TheNewsTrending) April 17, 2025
எனினும், காசாவில் நடக்கும் போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தங்கள் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக ஹவுத்திகள் கூறுகின்றன.
இந்நிலையில், இறப்புகள் மற்றும் காயங்கள் குறித்து அமெரிக்கா எந்த தகவல்களும் வெளியிடவில்லை.
மேலும், செங்கடலில் வணிக மற்றும் இராணுவக் கப்பல்களுக்கு எதிராக ஹவுத்திகள் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ஹவுத்திகளுக்கு எதிராக இதேபோன்ற ஏவுகணைத் தாக்குதல்கள் பைடன் நிர்வாகத்தால் பலமுறை மேற்கொள்ளப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் நம்பிக்கையின் நாயகர்கள் என்று அறிவிக்கப்படவுள்ளனர்...!
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
