பிரதமருக்கு செல்வம் அடைக்கலநாதன் அவசர கடிதம்!
மன்னார் நகர சபையை மாநகர சபையாகத் தரம் உயர்த்துவது தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இன்றைய தினம் (03.04.2023) அனுப்பப்பட்ட கடிதத்தில் கூறியுள்ளதாவது, மன்னார் நகர சபையை மாநகர சபையாகத் தரம் உயர்த்துவது தொடர்பில் அமைச்சரவையில் இருந்து அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

நடவடிக்கை
எனினும், இன்னும் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படவில்லை என்பதனை தங்களது கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
எனவே விரைவில் மன்னார் நகர சபையை மாநகர சபையாகத் தரம் உயர்த்துவது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனக் குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.