மட்டக்களப்பில் இடம்பெற்ற தென்னிந்திய பாடகர் உன்னிகிருஸ்ணனின் பக்தி இசைநிகழ்ச்சி
தென்னிந்திய பாடகர் உன்னிக்கிருஸ்ணன் மற்றும் அவரது மகள் உத்திராக உன்னிகிருஸ்ணன் மற்றும் பாடகரும் நடிகுருமான பிளக்பாண்டி கலந்துகொண்ட பக்தி இசை நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நேற்று மாலை இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையிலும் பல்லாயிரக்கணக்கான இசை இரசிகர்களுக்கு மத்தியில் இந்த பக்த இசை நிகழ்வு நடைபெற்றது.
எப்ஸ்டீன் கோப்புக்களில் சிக்கியுள்ள விடுதலைப் புலிகளின் தலைவருடன் புகைப்படத்தில் இருக்கும் இந்திய அதிகாரி
மகா சிவராத்திரி
மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரம்மகுமாரிகள் ராஜயோக நிலையத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மஹா சிவராத்திரியை முன்னிட்டு கல்லடி கடற்கரையில் 15ஆம் திகதி தொடக்கம் சிவலிங்க தரிசனம் நடைபெற்றுவந்த நிலையில் இறுதிநாளான நேற்று மாலை இந்த பக்தி இசை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.






ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri