கடற்கரையில் கிடந்த சடலம் - அடையாளங்களை வெளியிட்டு பொதுமக்கள் உதவியை நாடிய பொலிஸார்
பமுணுகம - உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று(14.06.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பமுணுகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சடலம் மீட்பு
உயிரிழந்தவர் சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க, 5 அடி 3 அங்குலம் உயரமுடைய ஒரு ஆண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் தனது முடியைக் குட்டையாக வெட்டியுள்ளதுடன், பச்சை நிற டி-ஷர்ட் மற்றும் நீலம், வெள்ளை நிறங்கள் கலந்த சாரம் அணிந்திருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் தற்போது ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சடலம் தொடர்பில் பமுணுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.