ஐநா மனித உரிமைப் பேரவையின் யோசனையை இலங்கை நிராகரிப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 57 ஆம் அமர்வுகளில் முன்வைக்க உத்தேசிக்கப்படவுள்ள யோசனையை முழுமையாக நிராகரிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ள சில காரணிகளை கருத்தில் கொண்டு இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவை கவனம் செலுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மனித உரிமை பேரவையின் அமர்வுகள்
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் திகதி தொடக்கம் இந்த மாதம் 11-ம் திகதி வரையில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வுகள் இம்முறை நடைபெறுகின்றது.
இம்முறை 57 ஆம் அமர்வுகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த அமர்வுகள் தொடர்பில் வெளிவகார அமைச்சரினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட யோசனையை கருத்தில் கொண்டு அரசாங்கம் தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.
இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச வரைவு திட்டத்தை முழுமையாக நிராகரிப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையை தொடர்பில் 51/1 என்ற யோசனை திட்டம் ஒன்று முன்மொழிக்கப்பட உள்ளது.
வெளி சாட்சியங்கள் திரட்டும் இயந்திரத்திற்கான அதிகாரம் வழங்கப்பட போவதில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு பொறிமுறைமை மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri