ஆறு மாதங்களில் பாதாள உலக குழு முடிவுக்கு கொண்டு வரப்படும் : தேசபந்து தென்னக்கோன்
எதிர்வரும் ஆறு மாத காலத்திற்குள் பாதாள உலகக் குழு செயற்பாடுகளும் போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளும் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த நாட்டையும் ஆக்கிரமித்துள்ள போதைப் பொருள் மற்றும் பாதாள உலகக் குழு செயற்பாடுகள் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் அமைதியான சூழ்நிலையில் வாழ்வதற்கான பின்னணி உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
விசேட பொலிஸ் நடவடிக்கை
கடந்த 17ஆம் திகதி யுக்திய என்னும் பெயரில் விசேட பொலிஸ் நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் தொடரும் என பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொலிஸாரும் இராணுவத்தினரும் கூட்டாக இணைந்து முன்னெடுத்த யுக்திய நடவடிக்கையின் ஊடாக இதுவரையில் 6583 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri
