வடக்கு - கிழக்கு தமிழ் எம்.பிக்களுடன் ரணில் இன்று சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்புக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (21.12.2023) வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெறும் என்று அழைப்புக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலுக்காக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
விக்னேஸ்வரன் மறுப்பு
எனினும் குறித்த சந்திப்புக்கு நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், இறுதியாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பையடுத்து நாடு திரும்பிய ஜனாதிபதி வடக்கு – கிழக்கு தமிழ்க் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

ரோஜா ரோஜா பாடல் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிய பார்க்க வைத்த இளைஞன்.. யார் இவர் Cineulagam

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
