நைட்ரஜன் வாயு மூலம் மரண தண்டனையை நிறைவேற்றிய அமெரிக்கா: ஐ. நா கடும் கண்டனம்
அமெரிக்கவின், அலபாமா மாநிலத்தில் நைட்ரஜன் வாயுவை கொண்டு கைதி ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டிருப்பதை ஐ. நா மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் கண்டித்துள்ளார்.
மேலும், இந்த முறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது கொடுமைப் படுத்துவதற்கு சமம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தண்டனைக்கு உள்ளான கெனத் ஸ்மித் என்பவர் 1988ஆம் ஆண்டு கூலிப் பணத்துக்காக கொலை செய்தார் என அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.
மரண தண்டனை
இதற்கமைய குறித்த நபருக்கு நைட்ரஜன் வாயுவைக் கொண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தண்டனை தொடர்பில் கருத்துரைத்த ஐ. நா மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் வோல்கர் டர்க்,
“நைட்ரஜன் வாயு மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து கடும் கவலை தெரிவிக்கப்படும் வேளையில், கெனத் யூஜின் ஸ்மித் என்பவருக்கு அந்த முறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தருகிறது.
இந்த முறை இதற்கு முன் சோதித்துப் பார்க்காத ஒன்று. இவ்வாறு ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவது கொடுமைப்படுத்துவதற்கு ஈடாகலாம்,” என கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அடக்கம் பண்ணிடுங்க.. குணசேகரன் அதிர்ச்சி திட்டம்! எதிர்நீச்சல் தொடர்கிறது '4 பிப்ரவரி' ப்ரோமோ Cineulagam
'வித் லவ்' படம் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் சொன்ன விமர்சனம்.. படம் எப்படி வந்துள்ளது தெரியுமா Cineulagam
பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் இருவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்திய இந்தியா News Lankasri
18 ஆண்டுக்கு பின் செவ்வாய்-ராகுவால் உருவாக்கும் அங்காரகயோகம்! டபுள் ஜாக்பாட் பெறும் 3 ராசிகள் Manithan