முல்லைத்தீவு மனித புதைகுழி தொடர்பில் ஐநாவின் முக்கிய பதில்(Video)
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி விவகாரம் தொடர்பான விசாரணைகளுக்கான உதவிகளை ஐக்கியநாடுகள் சபை செய்வதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பில் அறிக்கைக் ஒன்று வெளியிடப்பட்டது.
குறித்த அறிக்கையில் இதுவரை இலங்கையில் 32 மனித புதைகுழிகள் இருந்ததாகவும், கொக்குதொடுவாய் புதைகுழியானது 33வது மனித புதைகுழி என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன்மூலம் இதற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி தொடர்பில் சர்வதேச ஆதரவை நாம் திரட்டவில்லை என்பது வெளிப்படுத்தப்படுகிறது.
மேலும், கொக்குதொடுவாய் மனித புதைக்குழி தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பிலான கடிதமொன்றை ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அனுப்பியிருந்தோம்.
இதற்கு ஐ.நா மனித உரிமை பேரவையானது மனித புதைக்குழி விவகாரம் தொடர்பிலான விசாரணைகளுக்கான உதவிகளை மேற்கொள்வதாக ஒப்புக்கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
