கட்டார் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும்.. இஸ்ரேல் வெளியிட்ட தகவல்
இஸ்ரேலிய அரசாங்கம், கட்டார் மீது மீண்டும் குண்டுவீச்சு நடத்தும் வாய்ப்பு உள்ளதாக அமெரிக்காவிற்கான இஸ்ரேலிய தூதர் யெச்சியல் லெய்டர் கூறியுள்ளார்.
மேலும் அவர், "தோஹாவில் இஸ்ரேல் குண்டுவீச்சு நடத்தியதற்கு பல நாடுகளிடம் இருந்து எதிர்ப்பு எழுந்த போதிலும், உலகம் அதை விரைவில் மறந்துவிடும்.
இம்முறை இல்லை எனினும், இஸ்ரேல் அடுத்த தாக்குதலில் தனது இலக்கை அடையும், அவர்களை பிடிக்கும்.
அடுத்த தாக்குதலில்..
நேற்று தாக்குதலில் குறிவைக்கப்பட்ட, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட ஹமாஸ் அதிகாரிகள் மீதான தாக்குதல் போன்ற எதிர்காலத்தில் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடும்.
இப்போது, நாங்கள் கொஞ்சம் விமர்சனங்களுக்கு உள்ளாகலாம். ஆனால் விரைவில் எல்லோரும் இதை மறந்துவிடுவார்கள். இஸ்ரேல் சிறப்பாக மாற்றப்படுகிறது.
இந்த முறை நாங்கள் அவர்களைப் கைப்பற்றவில்லை என்றால், அடுத்த முறை அவர்களைப் பெறுவோம்" என்று லெய்டர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலின் இலக்கு
நேற்றைய தினம், கட்டாரின் தோஹா நகரில் உள்ள ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்தது.
இதனை தொடர்ந்து, ட்ரம்ப் இஸ்ரேலின் குறித்த தாக்குதலுக்கு அதிருப்தி வெளியிட்டிருந்ததுடன் பல்வேறு நாடுகளும் கண்டனங்களை வெளியிட்டன.
இந்நிலையில், கட்டார் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்ற இஸ்ரேல் தரப்பின் கருத்து மத்திய கிழக்கில் போரபதற்றத்தை அதிகரிக்கும் என எச்சரிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
