மகிந்த ராஜபக்சவுடன் கெஹேல்பத்தர பத்மே! சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படங்கள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹேல்பத்தர பத்மே இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களின் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
இலங்கையில் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்த பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹேல்பத்தர பத்மே, சமீபத்தில் இந்தோனேசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
பகிரப்படும் புகைப்படங்கள்
தற்போது, அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு அவர் உட்பட கைது செய்யப்பட்ட 5 பாதாள உலகப் புள்ளிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
இவ்வாறிருக்க, கெஹேல்பத்தர பத்மேவுடன் தொடர்புடைய பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதி ஒருவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதேவேளை, கெஹேல்பத்தர பத்மேவுடன் தொடர்பில் உள்ள முக்கிய புள்ளிகளின் பட்டியலை விரைவில் வெளியிடவுள்ளதாக தற்போதைய அரசாங்கமும் குறிப்பிட்டு வருகின்றது.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் கெஹேல்பத்தர பத்மே இருப்பது போன்ற புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri