பிரித்தானியாவில் இருந்து வந்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பிரித்தானிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்தில் இருந்து இன்று முற்பகல் இலங்கை வந்த நிலையில் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான பிரித்தானியார் பல கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளை கடத்த முற்பட்ட வேளையில் விமான நிலையத்தில் சிக்கியுள்ளார்.
பிரித்தானிய பிரஜை
குறித்த நபரின் பயண பொதியை சோதனையிட்ட வேளையில், 01 கிலோ 370 கிராம் ஹசீஸ் போதைப்பொருளும் 908 கிராம் குஷ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் சந்தைப் பெறுமதி 3 கோடி ரூபாவுக்கும் மேல் என கணிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜை நீர்கொழும்பில் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சந்தேக நபரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
