பிரித்தானியாவில் இருந்து வந்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பிரித்தானிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்தில் இருந்து இன்று முற்பகல் இலங்கை வந்த நிலையில் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான பிரித்தானியார் பல கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளை கடத்த முற்பட்ட வேளையில் விமான நிலையத்தில் சிக்கியுள்ளார்.
பிரித்தானிய பிரஜை
குறித்த நபரின் பயண பொதியை சோதனையிட்ட வேளையில், 01 கிலோ 370 கிராம் ஹசீஸ் போதைப்பொருளும் 908 கிராம் குஷ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் சந்தைப் பெறுமதி 3 கோடி ரூபாவுக்கும் மேல் என கணிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜை நீர்கொழும்பில் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சந்தேக நபரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri