அழுகிய நிலையில் இரு சடலங்கள் மீட்பு
Sri Lanka Police
Crime
Death
By Aanadhi
17 hours ago
பதுளை அருகே அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத சடலங்கள் இரண்டு நேற்று (13) மீட்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் தல்தென அருகே மஹா ஓயாவில் மிதந்து வந்த நிலையில் சடலமொன்றை அங்குள்ள மணல் அகழும் தொழிலாளியொருவர் முதலில் கண்டுள்ளார்.
அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது மரக்கட்டையொன்றில் தொங்கிய நிலையில் இன்னொரு சடலமும் மிதந்து கொண்டிருந்த நிலையில் இரண்டு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
குறித்த சடலங்கள் இரண்டும் மிகவும் அழுகிய நிலையில் காணப்படுவதால் அடையாளம் காண்பதில் சிக்கல் இருப்பதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சடலங்கள் தற்போதைக்கு பதுளை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதவியேற்றுள்ள புதிய கனேடிய பிரதமர்: யார் இந்த மார்க் கார்னி..! 51 நிமிடங்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US