இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட சோதனை - வசமாக சிக்கிய இரு சந்தேகநபர்கள்
அம்பாறையில் போதைப்பொருட்களை நீண்டகாலமாக பாடசாலை மாணவர்களுக்கு விநியோகித்து வந்த இரு சந்தேகநபர்களிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கல்முனை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புறநகர் பகுதியில் இன்று (25) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது சந்தேகநபர்கள் சிக்கியுள்ளனர்.
சந்தேகநபர்கள் கைது
சம்பவம் தொடர்பில் 33 மற்றும் 34 வயதுடைய மருதமுனை பகுதியை சேர்ந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் வசமிருந்து மொத்தமாக 1,690 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் கைதான சந்தேகநபர்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்டநடவடிக்கைக்காக பெரிய நீலாவணை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.




ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
பற்றி எரியும் எண்ணெய் முனையம்- அமீரகத்தின் முக்கிய துறைமுகத்தை நோக்கி ட்ரோன் தாக்குதல் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam