சட்டவிரோத மது அருந்திய இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்
சட்டவிரோத மதுபானத்தை பயன்படுத்தி நடத்திய மது விருந்தில், மது அருந்திய மூன்று பேர் சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
படுகாராமடுவை பிரதேசத்தை இரண்டு பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
பிரதேசவாசிகள் இணைந்து இவர்களை யக்கல வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நண்பர்கள் சிலர் இணைந்து நேற்று சட்டவிரோத மதுபானத்தை அருந்தியுள்ளனர்.
அதனை அருந்தியவர்களில் மூன்று பேருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த சம்பவம் குறித்து கலேன்பிந்துனுவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.