அமெரிக்க ஹோட்டலுக்குள் சிக்கிய இலங்கை பிக்குவின் லீலைகள் - விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள்
அமெரிக்காவின் பொஸ்டன் நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட பொலிஸ் சோதனையின்போது, இலங்கை தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் சோதனையின் போது பாலியல் சேவைகளைப் பெற முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஏழு பேரில், இலங்கையைச் சேர்ந்த பௌத்த தேரர் ஒருவரும் அடங்குவதாக பொஸ்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் வசிக்கும் 32 வயதான மஹாயாயே வினீத என்ற தேரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தங்கத்தை கொண்டு வந்த விமானிக்கு நேர்ந்த கொடூரம்! வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்..
மனிதக் கடத்தல்
கடந்த சனிக்கிழமை Revere ஹோட்டலில் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு, மனிதக் கடத்தல் மற்றும் தவறான தொழில் ஒழிப்புக்காக பொஸ்டன் பொலிஸாரால் Operation Red Card என்ற விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாகவே இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. வணிக ரீதியிலான பாலியல் தொழிலுக்காக பெண்கள் மற்றும் சிறுவர்கள் பயன்படுத்தும் விளம்பர வலையமைப்பை கண்டறிவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாக இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மஹாயாயே வினீத தேரர் உட்பட கைது செய்யப்பட்ட ஏழு சந்தேக நபர்களுக்கும் எதிராக, பணத்திற்கு பாலியல் சேவைகளைப் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் பொஸ்டன் மத்திய மாநகர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட தேரர் அமெரிக்காவின் Tufts பல்கலைக்கழகத்தில் பௌத்த மத ஆலோசகராகப் பணியாற்றி வந்தவராகும். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அவர் தனது பதவியிலிருந்தும் விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தியான நிகழ்ச்சிகள்
மஹாயாயே வினீத துறவி, 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் Tufts பல்கலைக்கழகத்தின் பௌத்த மத ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

அங்கு அவர் பௌத்த தியானச் சங்கத்திற்கு வழிகாட்டுதல், தியான நிகழ்ச்சிகள் மற்றும் போதனைகளை நடத்தும் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
இலங்கையில் பிறந்த அவர், தனது 10 ஆவது வயதில் துறவறம் பூண்டுள்ளார். அத்துடன், 2022ஆம் ஆண்டு மே மாதத்தில் புகழ்பெற்ற Harvard Divinity பாடசாலையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் எவரும் இதுவரை நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக நிரூபிக்கப்படவில்லை என்பதுடன், இதற்கான வழக்கு விசாரணை எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழின அழிப்பில் முன்னேறிச் செல்லும் பௌத்த சிங்கள அரசியல் 15 மணி நேரம் முன்
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam