போதைப்பொருள் கடத்தல்: கோடீஸ்வர வர்த்தகர்கள் இருவர் கைது
கசினோ சூதாட்டத்தில் இருந்து வங்குரோத்து நிலைக்குச் சென்று, பாதாள உலகத்துடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் கோடீஸ்வர வர்த்தகர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊழல் குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று (3) இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல்காரரான தற்போது டுபாய்க்கு தப்பிச்சென்றுள்ள படோவிற்ற அசங்க என்பவரின் போதைப்பொருள் கடத்தல் வர்த்தகத்தில் இவர்கள் இணைந்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கல்கிஸ்ஸ பிரதேசத்தில் வசிக்கும் முன்னாள் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரும் ஜப்பானில் இருந்து வந்து பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த கோடீஸ்வர வர்த்தக பெண் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri