தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட இரு சிறுமிகள் : அவமானத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை உயிர்மாய்ப்பு
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 54 வயதுடைய ஆண் ஒருவரால், பக்கத்து வீட்டு 10 வயது சிறுமியும் தனது 12 வயது மகளும் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்ற சம்பவத்தை அறிந்த தந்தை ஒருவர் நஞ்சு அருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம்(17.06.2026) இடம்பெற்றுள்ளதையடுத்து பொதுக்கள் மத்தியில் பெரும் கவலையையும் அதிர்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார்
இது பற்றி தெரியவருவதாவது, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் உள்ள வீதியில் வசித்துவரும் 54 வயதுடைய ஆண் ஒருவர் அதே வீதியில் உள்ள 12 வயது சிறுமியின் வீட்டுக்கு வழக்கமாக சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறித்த 12 வயதுடைய சிறுமியின் வீட்டுக்கு அந்த நபர் சென்றுள்ள நிலையில் அங்கு குறித்த சிறுமியும் அவரது நண்பியான பக்கத்து வீட்டைச் சேர்ந்த 10 வயது சிறுமியும் தனிமையில் இருந்துள்ளனர்.
சிறுமியின் பெற்றேர் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குறித்த நபர் அந்த 12 வயது சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்தியுள்ளதுடன் பக்கத்து வீட்டு 10 வயதுடைய சிறுமியின் கைகளை பிடித்து இழுத்ததையடுத்து அவர் அங்ககிருந்து தப்பி ஓடிச் சென்றுள்ளார்.
இதன் பின்னர் 12 வயது சிறுமிக்கு நடந்ததை பார்த்த பக்கத்து வீட்டு 10 வயது நண்பியான சிறுமி நண்பியை பாடசாலையில் கேலி செய்து வந்துள்ளார்
இந்த சம்பவம் ஆசிரியருக்கு தெரியவந்ததையடுத்து அவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரை அழைத்து தெரியப்படுத்தியுள்ளார்.
கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் நேற்றுமுன்தினம் (17) காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிசார் சிறுமிகளை தவறான நடத்தைக்கு உட்படுத்திய 54 வயதுடைய விசேட தேவைடையவரை கைது செய்துள்ளனர்.

பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமிகளை மருத்துவ பரிசோதணைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதேவேளை துஷ்பிரயோகத்துக்கு உள்ளான 12 வயது சிறுமியின் தந்தையார் தனது மகளுக்கு நடந்த கொடூரத்தையும் அவமானத்தையும் தாங்க முடியாது சம்பவ தினமான நேற்றுமுன்திளம்(17) இரவு நஞ்சு அருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் சடலமாக நேற்று(18) மீட்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குறித்த பிரதேச பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை உயிரை மாய்த்துக் கொண்டவர் ஏற்கனவே ஒரு கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டு மாதத்தில் ஒரு நாள் பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையெழுத்து இட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan