பாறையிலிருந்து விழுந்து இருவர் பரிதாபமாக மரணம்
ஹாலிஎல, ஜகுல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள பாறையிலிருந்து விழுந்து இருவர் மரணமடைந்துள்ளனர்.
43, 25 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
தனியார் ஒப்பந்த நிறுவனமொன்றில் பணியாற்றி வரும் ஜேசிபி இயந்திரத்தின் சாரதியும் மற்றுமொரு நபருமே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.
குறித்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக பதுளை பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவின் பிரதான வைத்தியர் பாலித ராஜபக்ஷ (Palitha Rajapaksa) தெரிவித்துள்ளார்.
குறித்த இருவரும் எதற்காக பாறையின் மீது ஏறினர் என்று இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
