அநுர அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம்: நடைபெறவுள்ள இருநாள் விவாதம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரண்டு நாள் விவாதம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 21ஆம் திகதி, புதிய நாடாளுமன்றத்தின் கொள்கைப் பிரகடன உரையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றியிருந்தார்.
கொள்கைப் பிரகடன உரை
அதனையடுத்து, நாடாளுமன்றத்தின் கட்சித் தலைவர்கள் கூட்டம் கடந்த 25ஆம் திகதி நடைபெற்ற போது ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை குறித்து இரண்டு நாள் விவாதம் ஒன்றை நடத்துவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 03 மற்றும் 04ஆம் திகதிகளில் குறித்த விவாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசிய மக்கள் சக்தி கட்சியானது தனது புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒரு பயிற்சிப் பட்டறையாக இந்த விவாதத்தை நடத்த உத்தேசித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
வாணி ராணி சீரியல் நடிகர் முரளியை நினைவிருக்கிறதா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.. லேட்டஸ்ட் பேட்டி Cineulagam