பரீட்சை முடிந்து வீடு திரும்பிய மாணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி
கம்பளை - நரங்விட்ட பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் வீட்டின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கம்பளை - நரங்விட்ட, பிஹில்லதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய மனோரி நிசன்சலா ஹரிச்சந்திர என்ற தாய் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கணவன் மற்றும் மகன்கள் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், மழையின் காரணமாக உலர வைக்கப்பட்டிருந்த துணிகளை எடுக்கச்சென்ற போதே மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் மேலதிக விசாரணை
பரீட்சைக்கு சென்றிருந்த மகன் மாலை நான்கரை மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்தப்போது இரத்த வெள்ளத்தில் கிடந்த தாயை பார்த்து அதிர்ச்சியடைந்து அயலவர்களின் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
இதன்போது பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri