பரீட்சை முடிந்து வீடு திரும்பிய மாணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி
கம்பளை - நரங்விட்ட பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் வீட்டின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கம்பளை - நரங்விட்ட, பிஹில்லதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய மனோரி நிசன்சலா ஹரிச்சந்திர என்ற தாய் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கணவன் மற்றும் மகன்கள் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், மழையின் காரணமாக உலர வைக்கப்பட்டிருந்த துணிகளை எடுக்கச்சென்ற போதே மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் மேலதிக விசாரணை
பரீட்சைக்கு சென்றிருந்த மகன் மாலை நான்கரை மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்தப்போது இரத்த வெள்ளத்தில் கிடந்த தாயை பார்த்து அதிர்ச்சியடைந்து அயலவர்களின் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
இதன்போது பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan