பரீட்சை முடிந்து வீடு திரும்பிய மாணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி
கம்பளை - நரங்விட்ட பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் வீட்டின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கம்பளை - நரங்விட்ட, பிஹில்லதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய மனோரி நிசன்சலா ஹரிச்சந்திர என்ற தாய் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கணவன் மற்றும் மகன்கள் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், மழையின் காரணமாக உலர வைக்கப்பட்டிருந்த துணிகளை எடுக்கச்சென்ற போதே மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் மேலதிக விசாரணை
பரீட்சைக்கு சென்றிருந்த மகன் மாலை நான்கரை மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்தப்போது இரத்த வெள்ளத்தில் கிடந்த தாயை பார்த்து அதிர்ச்சியடைந்து அயலவர்களின் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
இதன்போது பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri
