ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
போலி விசாக்களை பயன்படுத்தி ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (26) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா (Vavuniya) பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனும் 24 வயதுடைய யுவதியும் ஆவர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்
சந்தேக நபர்கள் இருவரும் இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து நெதர்லாந்து நோக்கி செல்வதற்காக இன்றைய தினம் காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இதன்போது விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்களின் விசாக்கள் போலியானது என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த போலி விசாக்கள் நோர்வே பிரஜைகளினால் தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு அடுத்த நெருக்கடி... இந்த நாட்டின் முடிவால் இந்தியாவுடன் கைகோர்க்கும் சீனா News Lankasri

நிபந்தனையுடன் சண்டை நிறுத்த பேச்சுவார்த்தை: ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்..லண்டனில் தெரிவித்த அதிகாரிகள் News Lankasri

இதுவரை தோல்வியையே சந்திக்காத கேப்டன்! எதிர்கொள்ளப்போகும் அவுஸ்திரேலியா..எதிர்பார்ப்பில் WTC இறுதிப்போட்டி News Lankasri
