புதிய அமைச்சரவை தொடர்பில் அரசாங்கத்தின் விளக்கம்
ஐக்கிய இலங்கையை ஸ்தாபிக்கும் நோக்கத்துடனேயே நாங்கள் புதிய அமைச்சரவை உருவாக்கியுள்ளோம் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவையைக் கையாளக் கூடிய திறமையானவர்கள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இனமொழி சாதிய அடிப்படையில் அமைச்சரவையை உருவாக்கவில்லை. அமைச்சரவையை கையாளக்கூடிய மிகத்திறமை வாய்ந்த தனிநபர்களையே நாங்கள் தெரிவு செய்திருக்கின்றோம்.
மேல்மாகாண ஆளுநராக முஸ்லிம் வர்த்தகர் நியமிக்கப்பட்டுள்ளார், பிரதி சபாநாயகர் பிரதி அமைச்சர் பதவிகளை முஸ்லிம்களிற்கு வழங்கியுள்ளோம்.
மேலும் தேசிய பட்டியல் மூலம் முஸ்லிம் ஒருவருக்கு பிரதிநிதித்துவத்தை வழங்கியுள்ளோம். நாங்கள் இலங்கை முழுவதிற்கும் சேவையாற்றுவது குறித்தே கவனம் செலுத்துகின்றோம் இன மத மொழி அடிப்படையில் இல்லை. தற்போதைய சூழ்நிலையை முஸ்லிம் சமூகம் இன மத அடிப்படையில் நோக்ககூடாது.
ஐக்கிய இலங்கையை ஸ்தாபிக்கும் நோக்கத்துடனேயே நாங்கள் அமைச்சரவையை அரசாங்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 3 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
