மட்டக்களப்பில் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது
மட்டக்களப்பு(Batticaloa) - காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில் இரு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்படைய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (20.05.2024) இரவு இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது நடவடிக்கை
கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி ஆரையம்பதி பிரதேசத்தில் வீடு ஒன்றில் வளர்த்து வரும் இரு மாடுகளை திருடிய சம்பவத்தில் தலைமறைவாகிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, காத்தான்குடியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த 11ஆம் திகதி வீட்டை உடைத்து அங்கிருந்த வெளிநாட்டு பணமான 7,500 ரியால், கையடக்க தொலைபேசி மற்றும் இலங்கை பணம் உட்பட 8 இலட்சத்து 94 ஆயிரத்து 400 ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்ததுடன் திருடப்பட்ட பணம் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், இந்த இரு வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்த இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
ஒவ்வொரு நாளும் முரண்பாடான பேச்சு- ஈரான் போரில் ட்ரம்ப் நிலைப்பாட்டை விமர்சித்த மேக்ரான் News Lankasri