நீதிமன்றத்தில் சரணடைய சிந்திக்கும் டிரம்ப்!
அமெரிக்க நடிகைக்கு தேர்தல் நிதியினை வழங்கிய குற்றச்சாட்டில் சர்ச்சையில் சிக்கிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நீதிமன்றில் சரணடைய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டொனால்ட் டிரம்ப் 2016 ஆம் ஆண்டு ஆபாசப் பட நடிகையான ஸ்ட்ராமி டேனியல்ஸ் என்பவருடன் நெருக்கமான தொடர்பில் இருந்தபோது தேர்தல் பிரசாரத்திற்காக வசூலிக்கப்பட்ட நிதியினை நடிகைக்கு வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதனை குறித்த நடிகை புத்தகமொன்றில் குறிப்பிட்டு அம்பலப்படுத்தியமை அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
கைது செய்யப்பட வாய்ப்பு
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக டிரம்ப் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் மீண்டும் வேட்பாளராக தான் களமிறங்க உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் தான் கைது செய்யப்படுவதை தவிர்க்க மன்ஹாட்டன் டவுன்ட்டவுன் நீதிமன்றத்தில் அவர் சரணயடைய முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான சட்ட நடவடிக்கையில் டிரம்ப் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

Viral Video: கழுகுடன் வானில் பறந்து செல்லும் மீனின் தத்ரூப காட்சி! திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் காட்சி Manithan

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
