கிளிநொச்சியில் சிரமத்தை எதிர்கொள்ளும் பயணிகள்
தமிழர் தாயக பகுதியில் முதன்மையான காணப்படும் ஏ9 வீதியில் பல இடங்களில் சரியான பயணிகள் நிழல் குடைகள், பேருந்து தரிப்பிடங்கள் காணப்பட்டாலும் சில பகுதிகளில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் தரித்து நிற்க வேண்டிய நிலையே காணப்படுகின்றது.
கிளிநொச்சி பரந்தன் சந்தி பகுதியில் பரந்தனில் இருந்து கிளிநொச்சி பகுதிக்கு செல்லும் மக்கள் குறுந்தூரமாக இருந்தாலும் நீண்டதூரமாக இருந்தாலும் அங்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.
நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள்
இரண்டு பயணிகள் நிழல் குடைகள் அந்த பகுதியில் காணப்பட்டாலும் அவற்றில் பயணிகள் இருந்து செல்வதற்கான வசதிகள் எவையும் காணப்படவில்லை
இதனால் இரவு நேரங்களில் நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள் நிழல் குடைகளின் கீழ் இருந்து கொள்ள முடியாது வீதி ஓரங்களில் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுவதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
பிரதேச சபைகளால் பல இடங்களில் சரியான முறையில் பயணிகள் நிழல் குடைகள் அமைக்கப்பட்டாலும் பரந்தன் சந்தியில் இருந்து கிளிநொச்சி நோக்கி செல்பவர்கள் காத்திருக்கும் பகுதியில் முறுகண்டி செல்லும் சிற்றூர்திகள் மற்றும் கொழும்பு செல்லும் இரவு நேர பேருந்துக்களுக்காக மக்கள் காத்திருந்து செல்லும் நிலை காணப்படுகின்றது.
குறித்த பகுதியில் சரியான ஒரு பயணிகள் இருந்து பேருந்துக்களில் செல்லக்கூடிய வகையில் பயணிகள் நிழல் குடை அமைந்தால் பயணிகளுக்கு இலகுவாக இருக்கும் என்றும் பயணிகள் தெரிவித்துள்ளார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |







5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam
