புதிய பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நியமனம்
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது புதிய பாதுகாப்பு செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, புதிய பாதுகாப்பு செயலாளர் பதவிக்கு எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துயகொண்டா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
சம்பத் துயகொண்டா இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது 09 MI 24 தாக்குதல் ஹெலிகொப்டர் படைப்பிரிவின் விமானியாகப் பணியாற்றியிருந்தார்.
இந்நிலையில், தேசிய மக்கள் சக்தியுடன் (NPP) தொடர்புகளை பேணியமைக்காக ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டாவை முந்தைய அரசாங்கம் கறுப்புப் பட்டியலில் இணைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam