பிரித்தானியாவிற்கு மூன்று நாடுகளால் காத்திருக்கும் ஆபத்து: பயங்கரவாத தடுப்பு அதிகாரி எச்சரிக்கை
பிரித்தானிய தெருக்களில் குற்றச்செயல்களை ஊக்குவிக்க ஈரான், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் கயவர்களை களமிறக்கலாம் என பயங்கரவாத தடுப்பு பொலிஸாரின் மூத்த அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த நாடுகள் தங்கள் சார்பாக கயவர்களை களமிறக்கிவிட்டு, தங்கள் பங்கை நிராகரிக்க முடியும் என்றும் மாநகர பொலிஸ் உதவி கமிஷனர் Matt Jukes தெரிவித்துள்ளார்.
குறித்த மூன்று நாடுகளும் பெருந்தொகை பணத்தை செலவிட்டு பிரித்தானியாவில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானால் உயிருக்கு அச்சுறுத்தல்
மேலும், இந்த விவகாரத்தில் நிதானமாக இருக்க விரும்பவில்லை என்றும், ஈரான், சீனா மற்றும் ரஷ்யாவின் நடவடிக்கைகள் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்துவது கடமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று நாடுகளும் பணத்தை செலவிட்டு, இவ்வாறான செயல்களை பிற நாடுகளில் ஊக்குவிப்பதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஈரானால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் 15 வழக்குகள் கண்டறியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இஸ்ரேலில் அக்டோபர் 7 தாக்குதலுக்கு பின்னர் சாத்தியமான பயங்கரவாத குற்றங்கள் தொடர்பாக பிரித்தானியாவில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 10 மணி நேரம் முன்

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam
