தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டொன்று மீட்பு
திருகோணமலை -தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தினிபுரம் பகுதியில் கைக்குண்டொன்று இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்பலகாமம் விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
கைக்குண்டு கடந்த யுத்த காலங்களின் போது தமிழீழ விடுதலைப்புலிகளினால் பயன்படுத்தப்பட்டதா அல்லது வேறு யாருக்காவது சொந்தமானதா என்பது பற்றிய விபரங்கள் இன்னும் வெளிவரவில்லை.
ஆனாலும் குடித்தொகை குண்டை செயலிழக்கச் செய்வதற்காகத் திருகோணமலை நீதிமன்றில்
கட்டளை ஒன்றைப் பெற உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.