அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகத்தின் சில பகுதிகள் அவசரமாக முடக்கம்!
அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகனின் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பென்டகன் வளாகத்தில் ஆபத்தானப் பொருட்கள் கசிந்தமை மற்றும் காற்றின் தரம் குறைவடைந்துள்ளமை போன்ற காரணங்களால், அதன் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.
அத்துடன் அங்கிருந்த பணியாளர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விரிவான ஆய்வுகள்
பென்டகனின் உள்முகக் கண்காணிப்பு அமைப்புகள், அங்குள்ள காற்றின் தரத்தில் ஏதோவொரு பிரச்சினை நிலவுவதைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பென்டகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள தீவிரம் மற்றும் பாதிப்புகள் குறித்து தற்போது பாதுகாப்புப் பிரிவினரால் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
கருணா குழுவின் முக்கியஸ்தர் படுகொலை - ஒட்டுமொத்த தமிழர்களை காக்க அந்தவொரு இளைஞர் எடுத்த விபரீத முடிவு..!
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 8 மணி நேரம் முன்
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan