திருகோணமலையில் 29 வயதுடைய இளைஞர் கைது
திருகோணமலை - எத்தாபெந்திவெவ காட்டுப் பகுதியில் கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எத்தாபெந்திவெவ - பனிக்கிட்டியாவ பகுதியில் வயலுக்குச் செல்வதை போல் சென்று காட்டுப்பகுதிக்குள் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி செய்வதாக குற்றத்தடுப்பு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில் குறித்த காட்டுப் பகுதியை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது கசிப்பு உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படும் கோடா மற்றும் கசிப்பு பரல் போன்றவற்றுடன் சந்தேகநபரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் எத்தாபெந்திவெவ பகுதியைச் சேர்ந்த கிஷாந்த மதுரசிங்க என்ற 29 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக மொரவெவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
