திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 60 தொற்றாளர்கள்
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 60 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளது என திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் இன்று (09) வெளியிட்டுள்ள கோவிட் தொடர்பிலான அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கிண்ணியா பிரதேசத்தில் 17 தொற்றாளர்களும், குச்சவெளி பிரதேசத்தில் மூன்று பேரும், கோமரங்கடவல பிரதேசத்தில் 6 தொற்றாளர்களும், குறிஞ்சாங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒருவரும், மூதூர் பிரதேசத்தில் 6 தொற்றாளர்களும் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 27 கோவிட் தொற்றாளர்களும் இணங்காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 247 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 66 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனையை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஜூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 8ஆம் திகதிவரை 294 பேருக்குத் திருகோணமலை மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை 3719 பேர் கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 111 பேர்
இன்று வரைக்கும் உயிரிழந்துள்ளதாகவும், 95 கர்ப்பிணி தாய்மார்களுக்குத் தொற்று
இனங் காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம்
விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்து நடைபெற்ற விமானத்தில் 2 மணி நேரத்திற்கு முன்பு பயணித்த பயணி முன்கூட்டியே எச்சரிக்கை News Lankasri

ஏர் இந்தியா துயர சம்பவம்... ஒரு வாரத்திற்கு முன்பே விமான விபத்தை கணித்த இந்திய ஜோதிடர் News Lankasri

ஏர் இந்தியா விமான விபத்து: மகிழ்ச்சியையும் சோகத்தையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கும் ஒரு குடும்பம் News Lankasri
