திருகோணமலையில் 65 மாடுகளை சிறைபிடித்த விவசாயிகள்..
திருகோணமலை, பாட்டாளிபுரம் பகுதியில் பயிரிடப்பட்ட வேளாண்மைப் பயிர்களை துவம்சம் செய்த 65 மாடுகளை, நாகம்மாள் விவசாய சம்மேளனப் பிரிவின் விவசாயிகள் பிடித்து அடைத்து வைத்துள்ளனர்.
பாட்டாளிபுரம் - காயண்கேணி மற்றும் வேலப் பெருமாள் வெளிகளில் அத்துமீறி உட்புகுந்த இந்த 65 மாடுகளும், அப்பகுதியில் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு பயிர்களுக்குப் பெரும் சேதத்தை விளைவித்ததையடுத்து, விவசாய சம்மேளனத்தினர் ஒன்றிணைந்து குறித்த மாடுகளைப் பிடித்து அடைத்து வைக்கும் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.
நஷ்ட ஈடு
இந்த நடவடிக்கை குறித்து பாட்டாளிபுரம் விவசாயிகள் கருத்து கூறுகையில்,

மாடுகளால் விவசாயத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகளை விவசாய உத்தியோகத்தர்கள் வந்து நேரில் பார்வையிட வேண்டும் என்றும், உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு ஏற்பட்ட சேதத்துக்கான முழுமையான நஷ்ட ஈட்டினைப் பெற்றுத்தரும் வரை அடைத்து வைக்கப்பட்டுள்ள மாடுகளை ஒருபோதும் விடுவிக்க மாட்டோம் என்றும் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளின் இந்தச் செயல் காரணமாக அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவி வருகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் உள்ளனர். விவசாயிகளுக்கு நஷ்ட ஈட்டைப் பெற்றுத்தர விவசாய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா? அல்லது மாடுகள் தொடர்ந்து அடைத்து வைக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri